வணக்கம், வரவேற்கிறோம் !
நாமக்கல் இரத்ததான சேவை மையத்திற்கு தங்களை அன்போடு அழைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
இந்த தளம் இரத்ததான சேவையை வழங்குவதோடு மட்டுமல்லாமல் இரத்ததானம் தொடர்பான அனைத்து விளக்க தகவல்களையும் , நமது சேவை மையத்தின் செயல்பாடுகளையும் இங்கே பெறலாம். தாங்களும் எங்களோடு இணைந்து இரத்தகொடையாளராக , |
கடந்த 01.05.2015 முதல் வழங்கிய இரத்த அலகுகள் : 1685
|
நாமக்கல் இரத்ததான சேவை மையம், நாமக்கல் மாவட்டத்தில் செயலாற்றி வரும் பல்வேறு இரத்ததான அன்பர்கள் மற்றும் குழுக்களை இணைத்து அவசர கால இரத்த தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. மேலும் இம்மையத்திற்கு தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம் புதியதாக இணைந்திருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் மேலும் குழுவில் இருக்கும் நண்பர்களுக்கு ஓர் தாழ்மையான வேண்டுகோள்!
அன்றாடம் நம் பகுதியில் பல்வேறு நோய் சிகிச்சைகளுக்கு குருதி தேவை அதிகரித்து வருகிறது, இருப்பினும் இரத்ததானம் கொடுக்கும் அன்பர்கள் மிக மிக குறைவாக உள்ளனர், நாளை நம்மில் ஒருவருக்கும் இரத்த தேவை வரலாம். ஆகவே தாங்கள் தாமாக முன்வந்து அளிக்கும் இரத்ததானம் பல சமயத்தில் இரு உயிர்களையும் காக்கும் வல்லமை கொண்டது ஆகையால் இரத்ததானம் செய்ய முன்வருமாறு அன்போடு அழைக்கின்றோம்
உதிரம் கொடுப்போர்! உயிர் கொடுப்போர்! இரத்ததானம் பற்றிய ஓர் விழிப்புணர்வு
இரத்ததானம் என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதரின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.
3 மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு
5 - 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை
இரத்ததானத்தின் தேவைகள்..
அறுவைச் சிகிச்சையின் போதும், விபத்தின் போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு இரத்த தானம் தேவைப்படுகிறது. சிலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்ய முன் வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் நமது தேசத்தின் மொத்ததேவை சுமார் 4 கோடி யூனிட்கள் ஆகும் (1 யூனிட் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் ஆகும்). ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே.
இரத்தம் மனிதனின் வாழ்கையில் மிகவும் உயரிய பரிசாகும். இரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை.
ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் 5000 க்கும் மேல் இரத்த கொடையாளிகள் தேவைப்படுகிறார்கள்
ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியனுக்கும் மேல் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. இரத்தம் இவர்களில் பலருக்கு தேவைப்படலாம். கீமோதெரபி சிகிச்சையின் போது தினமும் தேவைப்படும்.
ஒரு ஒற்றை கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 யூனிட்களுக்கு மேல் இரத்தம் தேவைப்படலாம்.
இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள்
இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.இ. த்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.*
இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.
எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.
கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது.
இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்
இரத்தப் பிரிவு, இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும்.
இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.
தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு (Heart attack) ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.
ஹிமோகுளோபின் (Heamoglobin) அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது.
இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.
இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை.மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்.
ஒருவர் 18 வயதிலிருந்து 60 வயதுவரை ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்யலாம், பெண்கள் ஆறு மாதத்துக்கு ஒருமுறை இரத்ததானம் செய்யலாம்
கிராமத்தினர் கூட அறியாமையில் இருக்கலாம்.. நகரத்தில் இருக்கும் பலர் தங்களது சொந்தக்காரர்களின் தேவைக்கே கூட அடுத்தவர்களை இரத்ததானம் கேட்கும் நிலையில் இருக்கிறார்கள்
இந்த நிலையை கண்டிப்பாக நாம் மாற்ற வேண்டும்
மூன்று மாதத்திற்கு ஒருமுறை மட்டும் இரத்ததானம் செய்யவேண்டும் என மருத்துவ துறை அறிவுறுத்துகிறது
அன்றாடம் நம் பகுதியில் பல்வேறு நோய் சிகிச்சைகளுக்கு குருதி தேவை அதிகரித்து வருகிறது, இருப்பினும் இரத்ததானம் கொடுக்கும் அன்பர்கள் மிக மிக குறைவாக உள்ளனர், நாளை நம்மில் ஒருவருக்கும் இரத்த தேவை வரலாம். ஆகவே தாங்கள் தாமாக முன்வந்து அளிக்கும் இரத்ததானம் பல சமயத்தில் இரு உயிர்களையும் காக்கும் வல்லமை கொண்டது ஆகையால் இரத்ததானம் செய்ய முன்வருமாறு அன்போடு அழைக்கின்றோம்
உதிரம் கொடுப்போர்! உயிர் கொடுப்போர்! இரத்ததானம் பற்றிய ஓர் விழிப்புணர்வு
இரத்ததானம் என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதரின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.
3 மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு
5 - 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை
இரத்ததானத்தின் தேவைகள்..
அறுவைச் சிகிச்சையின் போதும், விபத்தின் போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு இரத்த தானம் தேவைப்படுகிறது. சிலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்ய முன் வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் நமது தேசத்தின் மொத்ததேவை சுமார் 4 கோடி யூனிட்கள் ஆகும் (1 யூனிட் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் ஆகும்). ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே.
இரத்தம் மனிதனின் வாழ்கையில் மிகவும் உயரிய பரிசாகும். இரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை.
ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் 5000 க்கும் மேல் இரத்த கொடையாளிகள் தேவைப்படுகிறார்கள்
ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியனுக்கும் மேல் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. இரத்தம் இவர்களில் பலருக்கு தேவைப்படலாம். கீமோதெரபி சிகிச்சையின் போது தினமும் தேவைப்படும்.
ஒரு ஒற்றை கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 யூனிட்களுக்கு மேல் இரத்தம் தேவைப்படலாம்.
இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள்
இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.இ. த்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.*
இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.
எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.
கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது.
இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்
இரத்தப் பிரிவு, இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும்.
இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.
தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு (Heart attack) ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.
ஹிமோகுளோபின் (Heamoglobin) அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது.
இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.
இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை.மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்.
ஒருவர் 18 வயதிலிருந்து 60 வயதுவரை ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்யலாம், பெண்கள் ஆறு மாதத்துக்கு ஒருமுறை இரத்ததானம் செய்யலாம்
கிராமத்தினர் கூட அறியாமையில் இருக்கலாம்.. நகரத்தில் இருக்கும் பலர் தங்களது சொந்தக்காரர்களின் தேவைக்கே கூட அடுத்தவர்களை இரத்ததானம் கேட்கும் நிலையில் இருக்கிறார்கள்
இந்த நிலையை கண்டிப்பாக நாம் மாற்ற வேண்டும்
மூன்று மாதத்திற்கு ஒருமுறை மட்டும் இரத்ததானம் செய்யவேண்டும் என மருத்துவ துறை அறிவுறுத்துகிறது